பாடகி ஜானகி மறைவு : துணை ஜனாதிபதி, முதல்வர், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் | 'நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது...' - மறக்க முடியாத எஸ் ஜானகியின் முத்தாய்ப்பான பாடல்கள்! | இசை உலகில் இருந்து விடைபெற்ற 'அன்னக்கிளி' எஸ் ஜானகி : 'இசையரசி'யின் வாழ்க்கை பயணம் | பிரபல பின்னணி பாடகி எஸ் ஜானகி காலமானார் | ‛என்ன விலை' படத்தில் வக்கீலாக நிமிஷா சஜயன் | அகில் படத்திற்கு வாழ்த்து சொன்ன சமந்தா | எழுத்தாளர் சங்க தேர்தல் : தலைவர் பதவிக்கு போட்டியிடும் சேரன் | அனுஷ்கா பட இயக்குனர் மீது 3.5 கோடி மோசடி வழக்கு | ஜீவா பட வெற்றியைத் தொடர்ந்து மம்முட்டியை இயக்கும் இயக்குனர் | மனைவியை ஏமாற்ற நினைத்ததில்லை : மாதவன் |

''ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே… வாழ்வென்றால் போராடும் போர்க்களமே…''. கடந்த, 20 ஆண்டுகள் முன் வெளியான 'ஆட்டோகிராப்' படத்துக்காக, கவிஞர் பா.விஜய் எழுதிய பாடல் தான் இது. எண்ணற்ற இளைஞர்கள் மத்தியில் இன்றளவும் தன்னம்பிக்கையை விதைத்துக் கொண்டே இருக்கிறது.
திருப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விஜயிடம் ஒரு மினி பேட்டி:
தன்னம்பிக்கை தரும் பாடல்களை தொடர்ந்து எழுதுவீர்களா?
கண்டிப்பாக. தற்போது வெளியாகும் சினிமாக்களில் இளைஞர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான பாடல்கள் அதிகளவில் இடம் பெறுகின்றன. அது, தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
பெரிய பட்ஜெட் படங்களை விட, சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுகிறதே?
சினிமா என்பது, ஜனரஞ்சகம் மற்றும் வியாபார நோக்கத்தை அடிப்படையாக கொண்ட ஒரு கலை. பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட் என்ற பார்வையை காட்டிலும், நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். அறிமுக நடிகர்களை வைத்து எடுக்கப்படும், சிறிய பட்ஜெட் படங்கள், 'ஓ.டி.டி.,'யில் மெகா ஹிட் படங்களாக வெற்றி பெறுகின்றன.
ஓ.டி.டி.,யின் எதிர்காலம்
சினிமாவுக்கான மிகப்பெரிய எதிர்காலம், ஓ.டி.டி., தான். நிறைய சினிமாக்கள் வெளிவரும் வாய்ப்புண்டு. என்னை போன்ற படைப்பாளர்களுக்கும், வாய்ப்பு அதிகம் கிடைக்கும். அதே நேரம், ஓ.டி.டி.,யில், சினிமாக்களுக்கு 'சென்சார்' இல்லாததால், கத்தி, ரத்தம் என வன்முறை காட்சிகள் நிறைந்த படங்களையும் தவிர்க்க முடியாது.
சினிமாவில் சாதிக்க விரும்புவோருக்கு கூறும் அறிவுரை!
சினிமா துறையை பொறுத்தவரை, முயற்சி அவசியம். தடைகளை தாண்டுகிற, போட்டிகளை எதிர்கொள்கிற, வலிகளை தாங்குகிற சகிப்புத்தன்மை நிறைந்த மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது, சினிமாவுக்கானது மட்டுல்ல. பொதுவான அறிவுரை தான். இன்றைய இளைஞர்கள், சிறிய கஷ்டத்தை கூட தாங்கும் மனவலிமை இல்லாமல் உள்ளனர். வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பதை உணர வேண்டும்.
அரசியல் சார்ந்த பயணம் குறித்து...
தற்போது, அவ்வளவாக அரசியல் களம் செல்வதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் கவியரங்கம், மேடை பேச்சில் பங்கேற்க செல்கிறேன். இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் அரசியல் ஆர்வம் குறைவாக இருக்கிறது. நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கும் கடமையை, இளைஞர்கள் உணர வேண்டும்; அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். மாணவ பருவத்தில் இருந்தே அரசியல் அறிவு மற்றும் அரசியல் பார்வையை விசாலமாக்கிக் கொள்ள வேண்டும்.




