தென்னிந்திய சினிமாவில் 40 ஆண்டுகள் : குஷ்பு நெகிழ்ச்சி பதிவு | 12 ஆண்டுகளுக்கு முன்பே இதை நிவின்பாலி சொன்னார் : அனுபமா பரமேஸ்வரன் | பிரித்விராஜ், நிவின்பாலி 4வது நேரடி மோதல் : இம்முறையாவது பிரித்விராஜ் வெல்வாரா? | ஹீரோ சைப் அலிகான், வில்லன் அக் ஷய் : ரகசியம் உடைத்த ஹைவான் டிரைலர் | திரிஷ்யம் நடிகையின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | கலை நிகழ்ச்சிக்காக காமெடி நடிகருக்கு மேக்கப் போட்டுவிட்ட மோகன்லால் | வாரணாசி : சர்வதேச சந்தைகளை குறி வைக்கும் ராஜமவுலி! | 7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்ஸ்டா டிபியை மாற்றிய பிரபாஸ் | சீனாவிலும் பிரம்மாண்டமாக வெளியாகும் ராமாயணா | ஸ்ரீதேவியின் சுயசரிதை புத்தகம் விரைவில் வெளியீடு |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். அவர் இதற்கு முன்பு இரு தயாரிப்பாளர்களிடம் நடிக்க ஒப்பந்தம் போட்டுவிட்டு அதன்படி நடந்து கொள்ளவில்லை என்ற புகார் ஒன்று இருந்தது.
தனுஷ் இயக்கம் நடிப்பில் பல படங்களைத் தயாரித்த தேனாண்டாள் நிறுவனத்திற்கு ஒரு படம் ஆரம்பமாகி பின்னர் நின்று போனது. அது போல பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் தனுஷ் ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.
அந்தப் படங்களில் நடிக்காமல் அவர் வேறு படங்களில் நடித்து வந்ததால் இருவரும் தயாரிப்பாளர் சங்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து ஒரு சுமூகத் தீர்வு எட்டப்பட்டது.
ஒருவருக்கு 15 கோடி, மற்றொருவருக்கு 8 கோடி தருவதாக தனுஷ் தரப்பில் சொல்லப்பட்டதால் புகார் மற்றும் பேச்சுவார்த்தை இனிதே நிறைவடைந்துள்ளது. இது நடந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் தனுஷ் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை என தற்போது இருவரும் மீண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வருகிறார்களாம்.
இது குறித்து பேச்சுவார்த்தை நடக்குமா அல்லது தருவதாகச் சொன்ன பணத்தைக் கொடுத்து தனுஷ் இதை முடிவுக்குக் கொண்டு வருவாரா என்பது இனி வரும் நாட்களில் தெரிய வரும்.




