முதல்வர் விஜய் தொடங்கிவைத்த போட்டி: அஜித் எத்தனையாவது இடம் பிடித்தார்? | 12 ஆண்டுகால 'திரிஷ்யம்' பயணம் குறித்து அபிஷேக் பதக் நெகிழ்ச்சி! | லோகேஷ் கனகராஜ் படத்தை கைவிட்ட அமீர்கான்: மற்றொரு சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்கிறார்! | பூமியிலிருந்து வேற்று கிரகத்திற்கு செல்ல வழி என்ன? இயக்குனர் கிருத்திகா உதயநிதி போட்ட பதிவு! | 'மயோசிடிஸ்' நோய் கற்றுத்தந்த பாடம்: சமந்தா | 'கிளாடியேட்டர்ஸ்' படத்தில் நடிக்கிறாரா விஜய் | விஜய் ரசிகராக நடிக்கும் முன்னாள் திமுக எம்எல்ஏ | தம்பியை கலாய்த்தார், சிவாஜியை புகழ்ந்தார் இளையராஜா | பிளாஷ்பேக்: “மணமகள்” திரைப்படம் தந்த மதிப்பிற்குரிய அறிமுகங்களும், மகத்தான மாற்றங்களும் | மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய நடிகர்கள்: 5 ஆபத்தான ஷூட்டிங் விபத்துகள் |

சூர்யா, மமிதா பைஜு, ராதிகா மற்றும் பலர் நடிப்பில் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் நேற்று வெளியான படம் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'. இப்படம் முதல் நாள் வசூலாக சுமார் 30 கோடியை நெருங்கியிருக்கலாம் என முதற்கட்ட பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் சுமார் 20 கோடியும், வெளிநாடுகளில் சுமார் 10 கோடியும் வசூலித்திருக்கலாம் எனத் தெரிகிறது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் இருவரும் தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றுள்ளது.
சூர்யா நடித்து கடைசியாக வெளிவந்த 'கருப்பு' திரைப்படம் முதல் வார இறுதி வசூலாக 147 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். அந்த வசூலை இந்தப் படம் கடக்குமா என்பது இரண்டு நாட்களில் தெரிய வரும்.
ஆன்லைன் டிக்கெட் புக்கிங் இணையதளத்தில் கடந்த ஒரு மணி நேரத்தில் இப்படத்திற்கு 35 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று வெளியான மற்றொரு படமான விஷால் நடித்த 'மகுடம்' படத்திற்கு 5 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.