ஆடை விவகாரம் : கங்கனா, கிர்த்தி டிஷ்யூம் டிஷ்யூம் | நான் தண்ணி, தம் அடிப்பதில்லை : கவின் | இடுப்பு காயத்திற்கு பிறகு முதல்முறையாக வெளியே வந்த ராஷ்மிகா | வாரணாசிக்கு பிறகு அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிக்கிறாரா மகேஷ் பாபு? | பெளசி வெளிநாட்டு உரிமைகள் விற்பனை : டிசம்பரில் ரிலீஸ் உறுதி | 400 மரங்களுக்கு நடுவில் சுனில் ஷெட்டியின் கனவு இல்லம் | பிரேமலு படத்திற்கு முன்பே உருவான கதை தான் பெத்லகேம் குடும்ப யூனிட் | தனது டூப் நடிகரின் இதய அறுவை சிகிச்சை செலவை ஏற்ற சல்மான் கான் | கியாரா அத்வானி தப்பித்தார் : விக்னேஷ் சிவனின் சுய கிண்டல் | ஓ.டி.டி v/s தியேட்டர்கள்... கண் துடைப்பா, காலத்தின் கட்டாயமா? |

திரைப்படங்களில் கஞ்சா பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இருக்கக் கூடாது என்பது தான் எனது விருப்பமும் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்தார்.
முருகு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படமான நிஞ்சா, தஞ்சாவூரில் இன்று துவங்கியது. நாயகியாக பிரார்த்தனா நடிக்கிறார். பட விழாவில் பேசிய ஜிவி பிரகாஷ், ‛‛தஞ்சாவூரை மையப்படுத்தி நிஞ்சா படம் உருவாகி வருகிறது. இந்த கதையை கூறிய உடனே எனக்கு பிடித்து விட்டது. காமெடி, காதல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இதில் இருக்கும் . குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும். அடுத்த ஆண்டு படம் வெளியாகும். இந்த படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. பொதுவாக திரைப்படங்களில் கஞ்சா' பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இருக்க கூடாது என்பது தான் எனது விருப்பமும் என தெரிவித்தார்.
முன்னதாக ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் படக்குழுவினருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.