தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன், சென்னை அடையாறு கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 85. தீயணைப்பு மீட்பு குழுவினர் அவரது உடலை தேடி மீட்டனர். கே. ராஜன், சில காலமாக குடும்பத்துடன் தொடர்பு இல்லாமல் தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது.