ஸ்கிரிப்டில் இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் 'டக்' என சேர்த்து 'ஹிட்' ஆன சீன்கள் | வார்த்தைகள் புரியவில்லை... ஆனால் பாடல் மட்டும் ஹிட் | நவம்பரில் கிரீஸ் நாட்டில் அனிருத் - காவ்யா திருமணம்.? | தொழில்நுட்ப புரட்சியாளர் 'பிரசாத் லேப்' சிவராமன் காலமானார்: கமல் இரங்கல் | மீண்டும் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி நடத்தும் குஷ்பு | குழந்தைகள் என்னை கொண்டாடுகிறார்கள்: மமிதா மகிழ்ச்சி | 'ராம் இன் லீலா' தலைப்பு மாற்றம் | பிளாஷ்பேக்: ஒரே ஒரு படத்தில் நடித்த நாட்டுப்புற பாடகி | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர மிமிக்ரி கலைஞர் | சூர்யவம்சம்... வாரணம் ஆயிரம்... படங்களுக்குபின் : ராதிகா சொன்ன தகவல் |

திரைப்படங்களின் திரைக்கதையில் என்ன தான் துல்லியமாகத் திட்டமிட்டு எழுதினாலும், சில நேரங்களில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தற்செயலாக நடக்கும் நிகழ்வுகள் தான் படத்தின் மாபெரும் வெற்றிக்கும், ரசிகர்கள் கொண்டாடும் 'மாஸ்' காட்சிகளுக்கும் காரணமாகி விடுகின்றன. தமிழ் மற்றும் இந்திய சினிமாவில், அப்படித் தற்செயலாக நடந்து திரையரங்குகளை அதிரவைத்த சில புகழ்பெற்ற தருணங்கள் இதோ:
1. பாட்ஷா - ரஜினியின் சிரிப்பு காட்சி

ரஜினியை மின் கம்பத்தில் கட்டி வைத்து, ஆனந்த் ராஜ் அவரை அடித்துவிட்டுச் செல்லும் காட்சி. அடி வாங்கி ரத்தம் சிந்திய நிலையில், ரஜினி மெதுவாகத் தலையை உயர்த்தி, வில்லனைப் பார்த்து ஒரு வித்தியாசமான, சிரிப்பு சிரிப்பார்.
உண்மைப் பின்னணி:
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஸ்கிரிப்டில் எழுதியது வெறும் அமைதியான, கோபமான பார்வையைத் தான். ஆனால், கேமரா ஓடிக் கொண்டிருந்த போது, ரஜினிகாந்த் தற்செயலாக அந்த ஸ்டைலாக, குழந்தை தனமாக சிரிப்பைச் சிரித்தார். அதை அப்படியே படமாக்கிய இயக்குனர், "இதுதான் படத்தின் மாஸ் திருப்புமுனை" எனத் தக்கவைத்துக் கொண்டார்.
2. புதுப்பேட்டை - தனுஷின் "அடிச்சுருவியா.." டயலாக்

கொக்கி குமார் (தனுஷ்) எதிரிகளைப் பார்த்துப் பயந்து கொண்டே, அதே சமயம் மிரட்டும் தொனியில் 'அடிச்சுருவியா.. வாங்கடா வந்து அடிங்க'' எனப் பேசும் மாஸ் காட்சிகள்.
உண்மைப் பின்னணி:
செல்வராகவன் ஸ்கிரிப்டில் வசனங்களை எழுதி வைத்திருந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷின் உடல் மொழியையும் உணர்ச்சிகளையும் பார்த்து, "உனக்கு என்ன தோணுதோ பேசு" என்று சுதந்திரம் கொடுத்தார். தனுஷ் அந்தப் பயத்திலும் பதற்றத்திலும் தன்னிச்சையாகப் பேசிய பல வசனங்களும், கையை நடுங்கவிட்டுப் பேசிய ஸ்டைலும் தான் இன்றளவும் 'மீம் டெம்ப்ளேட்' ஆக உலா வருகின்றன.
3. நாயகன் - "நீங்க நல்லவரா கெட்டவரா?"

படத்தின் கிளைமாக்ஸில் ஒரு சிறுவன் கமல்ஹாசனைப் பார்த்து "நீங்க நல்லவரா கெட்டவரா?" என்று கேட்பான். அதற்கு கமல் உதட்டைக் கடித்து, என்ன சொல்வதென்று தெரியாமல் கண்களில் கண்ணீருடன் யோசித்து தட்டுத் தடுமாறி, தெரியவில்லை என்பார்.
உண்மைப் பின்னணி:
மணிரத்னம் எழுதிய ஸ்கிரிப்டில் கமல் உடனே பதில் சொல்வது போலத்தான் இருந்தது. ஆனால், கேமரா ரோல் ஆகும் போது, கமல் அந்தப் பதிலைக் கூறாமல் சில நொடிகள் அமைதியாகி, உணர்ச்சிகளை முகத்தில் வெளிப்படுத்தினார். மணிரத்னம் 'கட்' சொல்லாமல் பார்க்க, அந்தத் தற்செயலான மவுனம் படத்தின் தலைசிறந்த காட்சியாக மாறியது.
4. துப்பாக்கி - விஜய் - வித்யுத் ஜம்வால் போன் கால் காட்சி

ஜெயராம் வீட்டில் விஜய் இருக்கும் போது, வில்லன் வித்யுத் ஜம்வால் போன் செய்து மிரட்டுவார். விஜய் மிகவும் கூலாக, "I am Waiting..." என்று மாஸாகக் கூறுவார்.
உண்மைப் பின்னணி:
ஏ.ஆர்.முருகதாஸ் முதலில் எழுதிய வசனம் வேறு மாதிரி இருந்ததாம். ஆனால் படப்பிடிப்பின் போது, விஜய் மிகச் சாதாரணமான தொனியில் "I am waiting" என்று சொல்லிப் பார்த்துள்ளார். அது அந்த இடத்திற்கு மிகக் கச்சிதமாகவும், மாஸாகவும் இருந்ததால், அதையே படத்தில் வைத்தனர். பின்னாள்களில் அது விஜய்யின் சிக்னேச்சர் டயலாக்காகவே மாறியது!




