காப்பிரைட் உத்தரவை மீறும் இளையராஜா மீது சரிகம வழக்கு : டில்லி ஐகோர்ட் நோட்டீஸ் | செலவு சிறுசு.... வரவு பெருசு... : வசூலை வாரிக் குவிக்கும் "ஹனுமான் அன்ஷ்" | விநோத உலகத்தை அறிமுகப்படுத்தும் “ட்ரோன்ஸ்” | ஓடிடி ரசிகர்களுக்கு ட்ரீட்: ஆவலுடன் எதிர்பார்த்த படங்கள் வெளியீடு..! | 80களில் இந்த திரைப்பிரபலங்கள் எப்படி இருந்திருப்பார்கள்...!! | 'ஓடிடி'க்காக மறு எடிட் செய்யப்படும் 'டாக்சிக்' | 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி | விற்பனை பிரதிநிதிகளின் வாழ்க்கையை பேசும் 'கோல்டு கால்' | ‛பத்தா' படம்... 'மகளே' பாடல் வெளியீடு : அப்பாமகள் பாசம் கதையா? | 'சிக்மா' டைட்டிலுக்கு விளக்கம் சொன்ன ஜேசன் சஞ்சய் |

தெலுங்கில் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா அவரது 14வது படமாக புதிய படத்தில் நடித்து வருகிறார். நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த படத்திற்கு 'ரணபலி' என தலைப்பு வைத்துள்ளதாக முதல் பார்வை மற்றும் அறிமுக வீடியோ உடன் அறிவித்துள்ளனர். இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரியஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இது பீரியட் டிராமா ஜானரில் உருவாகிறது. இந்த அறிமுக வீடியோவின் படி பார்த்தால், இப்படம் 1876ம் ஆண்டு காலகட்டத்தில் மெட்ராஸ் பிரசிடென்சியில் ஆங்கிலேயர் ஆட்சி காலகட்டத்தில் தென்னிந்தியாவில் அவர்கள், இந்தியர்களின் நிலத்தை கைப்பற்றியது என பல விஷயங்கள் குறித்து பேசுவது போல் தெரிகிறது. மேலும், இப்படத்தை 'தி கர்ஸ்ட் லேண்ட் சப்த பூமி' என்கிற நாவலை தழுவி உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது .
இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தி மம்மி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான அர்னால்ட் வோஸ்லு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற செப்டம்பர் 11ம் தேதியன்று 5 மொழிகளில் திரைக்கு வருகிறது என குறிப்பிட்டுள்ளனர்.




