டாக்சிக் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் : 3 மணி 14 நிமிடங்கள் நீளம்…. | சுதந்திர தின வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் புதுப்படங்கள்...! | கல்யாண வீடு பின்னணியில் இரண்டு சினிமா நிகழ்ச்சிகள் | காதல் முட்டாள் ஆக்குதா? சாதனையாளர் ஆக்குதா? | 'ஆர்.ஆர்.ஆர்' பட பாடகர் மீது இளம்பெண் புகாரின் பேரில் வழக்குப்பதிவு | பஹத் பாசில் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த ராஜமவுலி | செல்போனை அதிகம் பயன்படுத்தியதால் கழுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகை ஷகீலா | அருண் விஜய் - முத்தையா கூட்டணியில் உருவாகும் 'இருளன்' | நரியாக இருப்பதை விட நாயாக இருக்கவே விரும்புகிறேன் ; கங்கனா ரணாவத் | சினிமாவில் 67 ஆண்டுகள்: கமல்ஹாசன் நன்றி |

புஷ்பா 2 படத்தை அடுத்து அட்லி இயக்கும் ராக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இந்தப் படத்தில் அதிநவீன விஎப்எக்ஸ் பணிகள் முக்கியத்துவம் பெறுகிறது. அல்லு அர்ஜுன், தீபிகா படுகோனே, மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர் ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்டாலும் அல்லு அர்ஜுன், தீபிகா படுகோனேவின் பெயரை மட்டுமே படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும், இந்த ராக்கா படத்தின் முக்கிய காட்சிகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவல்படி, இப்படத்தை 2027 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் முடிவடைந்தாலும் இறுதி கட்ட பணிகள் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளுக்கு மட்டும் 10 மாதங்கள் தேவைப்படும் என்கிறார்கள். மேலும் அல்லு அர்ஜுனுக்கு டிசம்பர் மாதம் அதிர்ஷ்ட மாதமாக அமைந்து வருகிறது. காரணம், அவர் நடித்து வெளியான புஷ்பா படத்தின் இரண்டு பாகங்களும் டிசம்பர் மாதத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தன. அதன் காரணமாகவே இந்த ராக்கா படத்தையும் 2027 டிசம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.




