தென்னிந்திய சினிமாவில் 40 ஆண்டுகள் : குஷ்பு நெகிழ்ச்சி பதிவு | 12 ஆண்டுகளுக்கு முன்பே இதை நிவின்பாலி சொன்னார் : அனுபமா பரமேஸ்வரன் | பிரித்விராஜ், நிவின்பாலி 4வது நேரடி மோதல் : இம்முறையாவது பிரித்விராஜ் வெல்வாரா? | ஹீரோ சைப் அலிகான், வில்லன் அக் ஷய் : ரகசியம் உடைத்த ஹைவான் டிரைலர் | திரிஷ்யம் நடிகையின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | கலை நிகழ்ச்சிக்காக காமெடி நடிகருக்கு மேக்கப் போட்டுவிட்ட மோகன்லால் | வாரணாசி : சர்வதேச சந்தைகளை குறி வைக்கும் ராஜமவுலி! | 7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்ஸ்டா டிபியை மாற்றிய பிரபாஸ் | சீனாவிலும் பிரம்மாண்டமாக வெளியாகும் ராமாயணா | ஸ்ரீதேவியின் சுயசரிதை புத்தகம் விரைவில் வெளியீடு |

நடிகை கவுதமியை தொடர்ந்து திரைப்பட இயக்குனர் ஆர்வி உதயகுமார், அதிமுக.,வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
உரிமை கீதம் படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் உதயகுமார். கிழக்கு வாசல், சின்ன கவுண்டர், சிங்கார வேலன், எஜமான், பொன்னுமணி, ராஜகுமாரன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர். சமீபகாலமாக நடித்தும் வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக அதிமுக.,வில் இருந்து வந்த இவர் இப்போது கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், ''25 ஆண்டுகளாக நான் அதிமுக.,வில் உறுப்பினராகவும், மாநில கலைப்பிரிவு செயலாளராகவும் உள்ளேன். கட்சியின் தற்போதைய நிலையால் ஆழ்ந்த வேதனையும், கவலையும் அடைந்துள்ளேன். தற்போதுள்ள சூழலில் கட்சியில் நான் தொடர விரும்பவில்லை. ஆதலால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் மாநில கலைப்பிரிவு பதவியிலிருந்து விலகுகிறேன். இதுநாள் வரை எனது பணியில் துணை நின்ற அனைவருக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடிகை கவுதமி, அதிமுக., கட்சியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.




