Advertisement

சிறப்புச்செய்திகள்

அன்பே டயானா முதல் மைக்கேல் ஜாக்சன் பயோபிக் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | ரிலீசிற்கு முன்பே 'ஏ' சான்றிதழ் கிடைக்கும் என 'ஸ்பிரிட்' இயக்குனர் ஆரூடம் | குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மாதுரி தீட்சித் | தாமதமாகும் பென்ஸ் : தாடி எடுக்க முடியாத விரக்தியில் நிவின்பாலி | இப்படி தான் சினிமா எடுக்குறாங்களா? பிரமாண்ட தோற்றத்தை உருவாக்கும் சிறிய நுணுக்கங்கள் | 'சந்திரோல்சவம்' : மீண்டும் ஒரு மோகன்லால் படம் ரீ ரிலீஸுக்கு தயார் | டாக்சிக் முதல்நாளில் ரூ.150 கோடி வசூல் | சன்னி லியோன் மீதான பண மோசடி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | மூத்த தெலுங்கு நடிகர் ஜி.வி.நாராயண ராவ் மரணம் | ஒருபோதும் மாற மாட்டேன் - பிரியா பவானி சங்கர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியின் சுயசரிதை எழுதும் பணி தொடக்கம் ; பயோபிக் படம் எப்போது? - சவுந்தர்யா ரஜினி தகவல்

25 ஆக, 2026 - 04:52 IST
எழுத்தின் அளவு:
Soundarya-Rajini-begins-work-on-Rajinis-autobiography-when-will-the-biopic-be-made
Advertisement

ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறார். தனது நீண்டகால திரைவாழ்க்கையில் அவர் பல ஏற்ற இறக்கங்கள், நிதி நெருக்கடிகள், உடல்நலக் குறைவுகள் மற்றும் சர்ச்சைகளைச் சந்தித்துள்ளார்.

75 வயதிலும் தனது மாஸ் வெற்றிகளைத் தொடர்ந்து வழங்கி வரும் ரஜினி, தற்போது ஜெயிலர் 2 படத்தை அடுத்து அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் படத்தில் பிஸியாக நடிக்கிறார். இதற்கிடையே, அவர் தனது சுயசரிதையை எழுதும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவரது மகளும் இயக்குநருமான சவுந்தர்யா, தனது தந்தை சுயசரிதை எழுதி வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், தனது தந்தை சுயசரிதை எழுதும் பணியை அருகில் இருந்து பார்த்து வருவதாகக் கூறியுள்ளார். பெங்களூரில் பஸ் கண்டக்டராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தது வரையிலான அனைத்து அனுபவங்களையும் அவர் இதில் பதிவு செய்து வருகிறார்.

இந்த புத்தகம் பரமஹம்ச யோகானந்தரின் புகழ் பெற்ற ஆன்மிக நூலான ஒரு யோகியின் சுயசரிதை போல, பல தலைமுறைகளுக்கும் தேவையான ஒரு முக்கியமான வழிகாட்டி புத்தகமாக இருக்கும். அதேசமயம் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார் சவுந்தர்யா.

மேலும், ரஜினிகாந்தின் சுயசரிதையை திரைப்படமாக எடுக்கும் சூழல் எதிர்காலத்தில் அமைந்தால், அதை இயக்குவதோ அல்லது தயாரிப்பதோ தனது வாழ்க்கையிலேயே மிகவும் சிறப்பான மற்றும் உணர்வுபூர்வமான திட்டமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
‛இருமுடி' : சிறுமி நக்ஷத்ராவின் நடிப்பை பாராட்டிய தனுஷ்‛இருமுடி' : சிறுமி நக்ஷத்ராவின் ... சாய் அபயங்கரின் ‛ரதிமா' ஆல்பத்திற்கு வரவேற்பு சாய் அபயங்கரின் ‛ரதிமா' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

angbu ganesh - chennai,இந்தியா
26 ஆக, 2026 - 09:08 Report Abuse
angbu ganesh உண்மைகளை அப்படியே உள்ளது உள்ளபடி எழுதுங்கள் தலைவா அதுதான் உண்மையான பயோபிக்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap