பிளாஷ்பேக்: சமூகப் பட பாணியில் வந்து, சாதனை புரிந்த ஒரு பக்தித் திரைப்படம் | எதிர்மறை விமர்சனங்களால் துல்கருடன் இணைந்து நடிப்பதை தவிர்த்தேன் ; ஐஸ்வர்ய லட்சுமி | மாளவிகா மோகனனுக்கு பதில் வாமிகா கவி | 46 வருடம் முன்பு தான் நடித்த பட டைட்டிலிலேயே மீண்டும் நடிக்கும் மம்முட்டி | புஷ்பா இயக்குனர் படத்துக்காக உடல் எடையைக் குறைக்கும் ராம் சரண் | ஹீரோவாக அடுத்த வெற்றியைப் பெறுவாரா சூரி? | 20 ஆண்டுகளுக்கு பின் பிரபாஸ் பட பாடலை வைரலாக்கிய சீன நடனக்கலைஞர்! | அரசன், மஞ்சணத்தியை பெரிய அளவில் எதிர்பார்க்கும் பிரியங்கா மோகன் | இசையமைப்பாளர் ஆனது எப்படி? பாடகி கெனிஷா கொடுத்த விளக்கம் | தேசிய திரைப்பட விருதுகள், டில்லிக்கு வெளியே…. |

ஹிந்தியில் சஞ்சய் தத் நடிப்பில் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் வெளியான முன்னாபாய் எம்.பி.பி.எஸ். மற்றும் அதன் இரண்டாம் பாகமான லகே ரஹோ முன்னாபாய் ஆகிய இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. தமிழில் முதல் பாகமும் தெலுங்கில் இரண்டு பாகங்களும் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றியைப் பெற்றன. இரண்டாம் பாகம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிவிட்டன. மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடம் இப்போதும் குறையாத ஆர்வம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி, இந்த மூன்றாம் பாகம் குறித்து கூறும்போது, "மூன்றாம் பாகத்துக்கான பணிகள் கைவிடப்படவில்லை. அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. மூன்று கதைகள் எழுதப்பட்டு இதுவரை முழுமை அடையாமல் பாதியிலேயே நிற்கின்றன. இரண்டு பாகங்களும் வெளியாகி குறிப்பிட்ட தரத்தை நிர்ணயித்துள்ளன. அதைவிட அதிகமாகவோ அல்லது அதற்கு சமமாகவோ மூன்றாம் பாகத்தை உருவாக்குவதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.