பிளாஷ்பேக்: சமூகப் பட பாணியில் வந்து, சாதனை புரிந்த ஒரு பக்தித் திரைப்படம் | எதிர்மறை விமர்சனங்களால் துல்கருடன் இணைந்து நடிப்பதை தவிர்த்தேன் ; ஐஸ்வர்ய லட்சுமி | மாளவிகா மோகனனுக்கு பதில் வாமிகா கவி | 46 வருடம் முன்பு தான் நடித்த பட டைட்டிலிலேயே மீண்டும் நடிக்கும் மம்முட்டி | புஷ்பா இயக்குனர் படத்துக்காக உடல் எடையைக் குறைக்கும் ராம் சரண் | ஹீரோவாக அடுத்த வெற்றியைப் பெறுவாரா சூரி? | 20 ஆண்டுகளுக்கு பின் பிரபாஸ் பட பாடலை வைரலாக்கிய சீன நடனக்கலைஞர்! | அரசன், மஞ்சணத்தியை பெரிய அளவில் எதிர்பார்க்கும் பிரியங்கா மோகன் | இசையமைப்பாளர் ஆனது எப்படி? பாடகி கெனிஷா கொடுத்த விளக்கம் | தேசிய திரைப்பட விருதுகள், டில்லிக்கு வெளியே…. |

பிரபல மாடலான மீரா மிதுன் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு நீதிபதி எஸ். அல்லி அமர்வின் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அதில், மீரா மிதுன் ஆஜராகாததால் அவரை ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஏப்ரல் 4 ஆம் தேதிக்குள் மீரா மிதுனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ள மீரா மிதுன் தன்னைத்தானே சூப்பர் மாடல் என்று சொல்லிக்கொண்டார். சினிமாவில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்து பிரபலம் தேடினார். ஆனால், அதுவும் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்நிலையில், தனது நண்பருடன் சேர்ந்து கொண்டு அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை பேசி வந்த அவர், பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பேசியிருந்தார். இதனால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன்பின் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




