முதல்வர் விஜய் பிறந்தநாள், அவருடன் கேக் வெட்டி கொண்டாடிய திரிஷா | துபாயில் செட்டில் ஆனது ஏன் : யுவன் சங்கர் ராஜா விளக்கம் | மம்முட்டிக்கு பத்மபூஷண், மாதவனுக்கு பத்ம ஸ்ரீ : ஜனாதிபதி வழங்கினார் | 60 ஆண்டு அரசியலை விஜயும் செய்ய வேண்டாம்! எஸ்.ஏ.சி அறிவுரை | பாலகிருஷ்ணா படத்தில் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால்! | 4 நாட்களில் 50 கோடி வசூலை கடந்த சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' | விஜயை அன்பாலோ செய்தாரா திரிஷா? | ஜனாதிபதி முர்முவின் ஆவணப் படத்தை தயாரிக்கிறார் அமீர்கான் | முதன் முதலாக சினிமாவில் நடனமாடிய அன்னா பென் | பிளாஷ்பேக் : 3 படத்தில் ஒரே கேரக்டரில் நடித்த ரேவதி |

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த 'டிமான்டி காலனி' முதல் பாகம் 2015ம் ஆண்டிலும், இரண்டாம் பாகம் 2024ம் ஆண்டிலும் வெளியானது. இரண்டு பாகங்களும் கமர்ஷியலாக வெற்றிபெற்று நல்ல லாபத்தை பெற்றுகொடுத்தது. 2 கோடியில் தயாரிக்கப்பட்ட முதல் பாகம் 25 கோடிக்கு மேல் வசூலித்தது. 25 கோடியில் தயாரிக்கப்பட்ட 2வது பாகம் 80 கோடிக்கு மேல் வசூலித்தது. இதனால் 'டிமான்டி காலனி' 3ம் பாகம் உருவானது. இதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்தனர். சில மாதங்களாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
இந்நிலையில் செப்டம்பர் 11ல் படம் ரிலீஸ் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. டிமான்டி காலனி 2ம் பாகத்தில் ஹீரோவை விட, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருந்தது. இந்த பாகத்தில் கதை வேறு மாதிரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிமான்டி காலனி 2வது பாகத்துக்கு பின் தமிழில் பிரியா பவானி சங்கருக்கு வெற்றிகள் இல்லை. அவர் தெலுங்கு பக்கம் போய்விட்டார். பாகம் 3 வெற்றி பெற்றால், அவர் மீண்டும் தமிழில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது.