காப்பிரைட் உத்தரவை மீறும் இளையராஜா மீது சரிகம வழக்கு : டில்லி ஐகோர்ட் நோட்டீஸ் | செலவு சிறுசு.... வரவு பெருசு... : வசூலை வாரிக் குவிக்கும் "ஹனுமான் அன்ஷ்" | விநோத உலகத்தை அறிமுகப்படுத்தும் “ட்ரோன்ஸ்” | ஓடிடி ரசிகர்களுக்கு ட்ரீட்: ஆவலுடன் எதிர்பார்த்த படங்கள் வெளியீடு..! | 80களில் இந்த திரைப்பிரபலங்கள் எப்படி இருந்திருப்பார்கள்...!! | 'ஓடிடி'க்காக மறு எடிட் செய்யப்படும் 'டாக்சிக்' | 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி | விற்பனை பிரதிநிதிகளின் வாழ்க்கையை பேசும் 'கோல்டு கால்' | ‛பத்தா' படம்... 'மகளே' பாடல் வெளியீடு : அப்பாமகள் பாசம் கதையா? | 'சிக்மா' டைட்டிலுக்கு விளக்கம் சொன்ன ஜேசன் சஞ்சய் |

நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு குறித்த மாணவர் போராட்டம் சமீபத்தில் ஓய்ந்த நிலையில், தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணி தேர்வுகள் தொடர்பான முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். நீட் தேர்வு குளறுபடிகளுக்கான போராட்டத்தின் போது திரை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்த நிலையில், இப்போது இந்தப் போராட்டத்திற்கு பெரிய அளவில் யாரும் ஆதரவு கொடுக்கவில்லை.
பிரபல பாலிவுட் நடிகரான நஸ்ருதீன் ஷா மட்டும், "வாயில் எலும்புத் துண்டு வைத்திருக்கும் நாய் குரைக்க முடியாது" என்று இந்தப் போராட்டம் குறித்து வாய் திறக்காதவர்கள் பற்றி விமர்சித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் பியூஸ் மிஸ்ரா பேசும்போது, தற்போதைய சூழலில் அந்த எலும்பைக் கவ்விய நாய் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது இந்தக் கேள்வியை மேற்கோள் காட்டிய நடிகை கங்கனா ரணாவத், நஸ்ருதீன் ஷாவை நரி என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், "நஸ்ருதீன் ஷா போல நரியாக இருப்பதை விட நான் நாயாக இருப்பதையே விரும்புவேன். நாய்கள் விசுவாசத்திற்கும் அழகுக்கும் பெயர் பெற்றவை; நாயாக அழைக்கப்படுவதை நான் ஒரு பாராட்டாகவே கருதுவேன். நான் பிறந்த மண்ணுக்காகப் போராடுவதில் பெருமை கொள்கிறேன். ஆனால், நஸ்ருதீன் ஷா இந்த நாட்டின் உணவை உண்டு விட்டு அண்டை நாட்டுக்காகப் பேசுகிறார்" என குற்றம் சாட்டியுள்ளார் கங்கனா ரணாவத்.