சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய், நடிகர் ரஜினி இரங்கல் | சாலமன் பாப்பையா காலமானார் | மீண்டும் ஜாக்பாட் நிகழ்ச்சி... : குஷ்புவின் டிசைனர் யார் தெரியுமா? | நிஜ களரி வீராங்கணையாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | புதிய அரசியல் இயக்கம் தொடங்கும் சின்னத்திரை நடிகர் | பரத் நடித்துள்ள வெப் தொடர் வெளியானது | என் வாழ்க்கையில் நடித்தவருக்கு ஆஸ்கர் விருது தரலாம் : ரவி மோகனை சீண்டிய ஆர்த்தி | பிளாஷ்பேக் : சிவாஜியை காப்பி அடித்த கவுண்டமணி | பிளாஷ்பேக்: முதல் படத்திலேயே அதிரடி காட்டிய ஏ.பி.நாகராஜன் | லண்டனில் அஜித் பங்கேற்கும் கார் ரேஸை துவக்கி வைக்கிறார் முதல்வர் விஜய் |

ஜெயா டிவியில் நடிகை குஷ்பு பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கிய ஜாக்பாட் நிகழ்ச்சி அந்த காலத்தில் பிரபலமாக இருந்தது. குறிப்பாக நிகழ்ச்சியில் அவர் அணிந்து வந்த ஜாக்கெட் பெண்கள் மத்தியில் அப்போது டிரெண்ட்டாகவும், பேசு பொருளாகவும் இருந்தது. ஒவ்வொரு வார நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு விதமான மாடலில் அவர் ஜாக்கெட் அணிந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தார். அவருக்குபின் ஜாக்பாட் நிகழ்ச்சியை சிம்ரன் கூட நடத்தினார். பின்னர், அது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் 16 ஆண்டுகளுக்குபின் மீண்டும் ஜெயா டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சியை நடத்துகிறார் குஷ்பு. வரும் செப்டம்பர் 13 முதல் ஞாயிறுதோறும் ஜாக்பாட் ஒளிபரப்பாகிறது. இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
ஜாக்பாட் நிகழ்ச்சி குறித்து குஷ்பு பேசுகையில், ‛‛மீண்டும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மகிழ்ச்சி. என் உடை, பேச்சு, நிகழ்ச்சியில் வரும் கேள்விகள், பங்கு பெறும் அணிகள், சுவாரஸ்யங்களுக்காக அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் பலர். உங்க நிகழ்ச்சி வந்துவிட்டால் எங்க வீட்டில் உரிய நேரத்தில் சாப்பாடு வராது என பலர் புகார் கூட சொல்லியிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியை மீண்டும் பல புதுமைகளுடன் தொகுத்து வழங்குகிறேன்.
பிரபலங்கள் மட்டுமல்ல, அனைத்து தரப்பினரும் இதில் பங்கு பெற்று 10 லட்சம் வரை பரிசுகளை வெல்லலாம். காலத்துக்கு ஏற்ப வாட்ஸ் ஆப் மூலமாகவும் கேள்விகள் கேட்கப்பட உள்ளது. உங்க ஜாக்கெட்டை யார் டிசைன் பண்ணுகிறார்கள் என என்னிடம் கேட்காதவர்கள் இல்லை, இந்தமுறை ஜாக்பாட் நிகழ்ச்சியில் வரும் என் ஜாக்கெட்டை நடிகை பூர்ணிமா பாக்யராஜ் டிசைன் செய்து கொடுக்கிறார். சினிமாவில் இருந்த நான் இந்த நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரை வந்தேன், இன்னும் பிரபலம் ஆனேன். மீண்டும் கொஞ்சம் இடைவெளிக்குபின் சின்னத்திரை வந்துள்ளேன்'' என்கிறார்.




